பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 முதல் தலைவரை தேர்வு செய்ய மூன்று கவர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டது. இந்த கவர்களை தேடி கண்டுபிடிப்பவர்களே தலைவர் போட்டிக்கு நிற்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து கவர்களை தேடும் முயற்சியில் போட்டியாளர்கள் ஈடுபட்டனர். முதலில் மகத் ஒரு கவரையும் இரண்டாவது ஜனனி ஐயர் ஒரு கவரையும் கண்டுபிடிக்க மூன்றாவது கவரை கண்டுபிடிக்கும்போது மும்தாஜூக்கும் செண்ட்ராயனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது கவரை மும்தாஜ் கண்டுபிடிக்க அவரும் தலைவர் பதவிக்குரிய வேட்பாளராக மாறினார்

இந்த நிலையில் மூவரும் தங்களை தலைவராக தேர்வு செய்ய பிரச்சாரம் செய்தனர். இதில் மும்தாஜ், தலைவருக்கான மெச்சூரிட்டி ஜனனி, மகத்திடம் இல்லை என்றும் தன்னை தேர்வு செய்தால் அனைவருக்கும் ஒத்துழைக்கும் வகையில் இருப்பேன் என்றும் கூறி பிரச்சாரம் செய்தார்

ஆனால் வாக்குகளின் அடிப்படையில் ஜனனி ஐயர் முதல் தலைவராக தேர்வு பெற்றார். இதனால் மும்தாஜ் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஆரம்பம் முதலே மும்தாஜ் நாட்டாண்மை போக்குடன் இருப்பதாக போட்டியாளர்கள் பிக்பாஸிடம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜனனிக்கு மும்தாஜ் ஒத்துழைப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 2ஐ அடுத்து கமல்ஹாசனின் திட்டம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ளதால் இதனையடுத்து கமல்ஹாசன்

அருள்நிதியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் முதல் தேசிய விருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 2: காக்ரோச் கதை சொல்லி பல்பு வாங்கிய யாஷிகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஓவியாவின் பகுதிகளை அடிக்கடி பார்த்து மனப்பாடம் செய்து வந்திருப்பார்கள்