யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஹீரோவாக அவர் நடிக்க ஒப்பந்தமாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராதா மோகன், யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அழகிய தீயே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராதா மோகன், அதன் பின்னர் ஜோதிகா நடித்த ’மொழி’ த்ரிஷா நடித்த ’அபியும் நானும்’ உட்பட பல திரைப்படங்களை இயக்கினார். தற்போது அவர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ’பொம்மை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி.. நண்பருக்கு விருந்தாக்க முயற்சித்த கணவன்..!

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி அடைந்த கணவர் தனது நண்பருக்கு மனைவியை விருந்தாக்க முயற்சித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபுவா? ஆச்சரியமான தகவல்..!

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான  'வெண்ணிறை ஆடை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவரது முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்பதும் இருவரும் இணைந்து 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற

சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை: சுஹாசினி விளக்கம்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக

'வீரமே வாகை சூடும்' நடிகை மீது போலீஸ் புகார்.. ஐபிஎஸ் அதிகாரியுடன் மோதலா?

 ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்த நடிகை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. ஜிவி பிரகாஷ் சொன்னது என்ன?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு