ஜாமினில் வெளிவந்த சில நாட்களில் விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

பிரபல நடிகர் ஒருவர் ஜாமீனில் வெளியாகிய சில நாட்களில் சாலை விபத்தில் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் திலீப் சிங் சித்து நேற்று இரவு டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது

கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் கொள்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அந்த போராட்டத்தில் நடிகர் திலீப்சிங் சித்து கலந்து கொண்டார். இந்த பேரணியில் திடீரென ஏற்பட்ட கலவரம் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பதும் இதனை அடுத்து அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாமினில் வெளிவந்த ஒரு சில நாட்களில் டெல்லியில் அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

இந்திய திரை உலகின் பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயின் அவதாரத்திற்கு ரெடியான நடிகர் ஷாருக்கின் மகள் சுஹானா… வைரல் பிக்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகளான சுஹானா கான் ஏற்கனவே

தடுப்பூசி போட அடம்பிடிக்கும் நோவக்… பகீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

செர்பிய நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்

சாகசமான காதல் பயணம்… நடிகை ஸ்ரேயா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும்

60 வயது கூலித் தொழிலாளி திடீரென்று மாடலான அதிசயம்!

கேரள மாநிலத்தில் கூலித்தொழில் செய்துவரும் 60 வயது முதியவர்