என்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை பொழியும்போது வறட்சியான பகுதியாக கருதப்படும் தமிழக பகுதி ஒன்று மழையில் 100ஆண்டு சாதனையை முறியடித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழையின்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மிகக்குறைவான மழையே பெய்யும். வடகிழக்கு பருவமழையின்போது இந்த பகுதியில் அதிக மழை பெய்தாலும் தென்மேற்கு பருவமழையின்போது இந்த பகுதி வறட்சியாகவே கருதப்படும். ஆனால் நேற்று பாம்பன் பகுதியில் ஒருசில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அதிகபட்சம் பாம்பன் பகுதியில் 66மிமீ மழை மட்டுமே பதிவாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பெய்தது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 1910ஆம் ஆண்டு 103.6 மிமீ மழை பெய்ததே சாதனையாக இருந்தது ஆனால் 100 வருடங்களுக்கு முன் பதிவான இந்த சாதனையை சில மணி நேரத்தில் பாம்பனில் நேற்று பெய்த மழை முறியடித்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

More News

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் நட்சத்திர ஓட்டல் உள்பட ஒரு சில ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளிகள்

தமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன் 

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக சிம்பு மற்றும் பார்த்திபன் நடித்து வந்த போதிலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்

உயிர் மற்றும் மானத்தை பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை மூன்று பெண்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் 

கமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமலஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய திரைப்படம் 'சத்யா'.