மதுரை என்கவுண்டரின் பின்னணி என்ன? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

இன்று மாலை மதுரையில் இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த 29 வயது இருளாண்டி என்பவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் அவரை போலீஸார் கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் இருளாண்டி, சகுனி கார்த்திக் என்ற மற்றொரு ரவுடியின் வீட்டில் இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து மதுரையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மதுரை போலீசாருக்கு திடுக்கிடும் ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து சகுனி கார்த்திக்கின் வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு ரவுடிகளும் போலீசாரை நோக்கி சுட்டதால் பாதுகாப்பு கருதி போலீசாரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் இருளாண்டி, சகுனிகார்த்திக் இருவரும் கொல்லப்பட்டனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய பிரமுகர் குறித்த தகவல் தெரியவில்லை. இவர்களுடைய கூட்டாளிகளை பிடித்தால் மட்டுமே இந்த தகவல் கிடைக்கும் என்பதால் போலீசார் மதுரை முழுவதும் சல்லடை போட்டு  தேடி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

More News

உன்னையும் மண்ணையும் வென்று வா நீ! ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்

இலங்கையில் ஒரு பகுதியான 'யாழ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் "என்ன நடக்கின்றது என்பதே இந்த படத்தின் கதை.

தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர்.

'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.