தர்ஷன் மனுசனே இல்லை: ஆவேசமான காதலி சனம்ஷெட்டி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பதும், வெளியேறிய பின்னர் சேரன், கஸ்தூரி தவிர மற்ற அனைவர் மீது அவர் குற்றஞ்சாட்டினார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மதுமிதாவை யாரும் சந்திக்கவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மதுமிதா கத்தியால் தனது கையை கீறி தற்கொலைக்கு முயன்றபோது யாரும் அவரை தடுக்காமல் இருந்ததும், குறைந்தபட்சம் முதலுதவி கூட செய்யவில்லை என்றும் மதுமிதா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனையடுத்து மதுமிதாவை தொடர்பு கொண்ட தர்ஷன் காதலி சனம்ஷெட்டி, ‘தர்ஷன் கூட முதலுதவி செய்யாமல் இருந்தது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மனுசனே இல்லை என்றும் மதுமிதாவிடம் சனம் ஷெட்டி கூறியதாக தெரிகிறது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தர்ஷன் உள்பட யாரும் மதுமிதாவை நேரில் சந்திக்கவும் இல்லை, இதுவரை மன்னிப்பு கேட்டதாகவும் தெரியவில்லை. இதனால் தர்ஷன் மீது சனம்ஷெட்டி கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த கோபம் அவரது சமீபத்திய சமூக வலைத்தள பதிவு ஒன்றிலும் தெரிந்தது. அதில், நான் தவறான நபரிடம் பழகிவிட்டேன் என்பது இப்போதுதான் புரிகிறது. அவர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். காலம் பதில் சொல்லும் அது லாபமா, நஷ்டமா என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவால் இருவருக்கும் உறவில் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More News

சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி, அச்சங்கத்திற்கு இன்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

கோட்டையை எட்டி பார்க்கும் கமல்ஹாசன்: ஷங்கரின் வித்தியாசமான வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளையும் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

காற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு

ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

திருமணமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

உலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்!

ஒருசில மருத்துவமனைகளில் உள்ளே சென்றாலே ஏன் இங்கு வந்தோம் என்ற அளவுக்கு கொடூரமாக இருக்கும். ஆனால் சில மருத்துவமனைகளில் நுழைந்தால் மருத்துவமனை போல் இல்லாமல் ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கும்.