பிரேக் அப் முடிவு எடுத்தது ஏன்? சனம்ஷெட்டி குற்றச்சாட்டுக்கு தர்ஷன் பதிலடி

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, நிச்சயதார்த்தமும் செய்து விட்டு தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம்ஷெட்டி புகார் கொடுத்த செய்தி குறித்து பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது தர்ஷன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். சனம்ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சனம் ஷெட்டியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாகவும், தன்னை அவர் டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறினார்.

மேலும் நான் எங்கே போனாலும் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் அதேபோல் நான் நடிக்க ஒப்பந்தமான படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தியதாகவும் இதனை எல்லாம் பார்த்துதான் அவருக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்ற முடிவை தான் எடுத்ததாகவும் தர்ஷன் கூறியுள்ளார்

மேலும் திருமண நிச்சயதார்த்தம் குறித்து இலங்கை சென்று என்னுடைய தாயாரை சனம் ஷெட்டி சந்தித்ததாகவும் அப்போது என்னுடைய தாயார் ’நீங்கள் இருவரும் உண்மையாகவே காதலித்தீர்கள் என்றால் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்க தயார் என்றும், தர்ஷனின் தங்கை திருமணம் முடிந்தவுடன் உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக எனது அம்மா கூறினார்கள் என்றும் தர்ஷன் கூறினார்

மேலும் தான் நடிக்க ஒப்பந்தமான படத்தின் தயாரிப்பாளர்களிடம் சனம் ஷெட்டி சென்று தர்ஷனை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் இதன் காரணங்களால் தான் அவரை தவிர்க்க முடிவு செய்ததாகவும் தர்ஷன் கூறினார். அதேபோல் சனம் ஷெட்டியிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மட்டும் வாங்கியதாகவும் அந்த பணத்தையும் தான் பிக்பாஸ் பணம் வந்தவுடன் கொடுத்து விட்டதாகவும் மற்றபடி அவரிடம் எந்த பணமும் பெறவில்லை என்றும் கூறினார். தர்ஷனின் இந்த பதிலடிக்கு சனம்ஷெட்டி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கீர்த்திசுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ் படம் எதுவும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகவில்லை

இந்தியாவின் 2020 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2008 – 2009 ஆம் நிதியாண்டிற்குப் பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான மந்த நிலையைச் சந்தித்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு தனியாக விமானத்தில் வந்த சென்னை மாணவி!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக

தனுஷ் படத்தில் இணைந்த அமலாபால்!

தனுஷ் மற்றும் அமலாபால் இணைந்து 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷின் ரீமேக் படம் ஒன்றில் அமலாபால்

சிம்பு-வெங்கட்பிரபு மீண்டும் இணையும் படம் குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.