தங்கர்பச்சான் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2019]

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் அவர்கள் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது அக்டோபர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென தங்கர்பச்சான் அறிவித்துள்ளார். மேலும் எனது இயக்கத்தில் கதாநாயகனாக என் மகனை அறிமுகம் செய்கிறேன் என்றும் அனைவரின் வாழ்த்துகளை எதிர் நோக்கி காத்திருப்பதாகவும் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நடிக்கும் இந்த படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் இந்த செய்தி சரியானதா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தில் விஜித் பச்சான் ஜோடியாக மிலானா நாகராஜ் மற்றும் அஸ்வினி சந்திரசேகர் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சித்தார்த் நடித்த 'அருவம்' சென்சார் தகவல்கள்

சித்தார்த் நடித்த 'அருவம்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக உணவுக்கடைகள் சீல் வைக்கப்படும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன் - லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தவர் வனிதா. மற்றவர்களை பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும் அவர் கூறுவதில் நியாயம் இருக்கும்

ரஜினி கட்சிக்கு செல்கிறாரா சினேகன்? அவரே அளித்த பதில்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான

பிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் 

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதிய நிலையில் இந்த கடிதம் எழுதிய 49 பேர் மீது சமீபத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு