கானாவில் கலக்கிய சிறுவன்.. திரைப்பட வாய்ப்பு தந்த தமன்!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சீசன் 9 கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கண் பார்வையற்ற சிறுமி புரோகிதஸ்ரீ என்பவர் மிக அழகாக பாடிய நிலையில் அவருக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த நிகழ்ச்சியின் நடுவரும் இசையமைப்பாளருமான தமன் உறுதி அளித்துள்ளார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கானா பாடலை அசத்தலாக பாடிய சிறுவனுக்கு தனது அடுத்த திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாகவும் உறுதி செய்து உறுதி அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து தற்போது 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரியை சேர்ந்த புரோகிதஸ்ரீ என்னும் கண் பார்வையற்ற சிறுமி கலந்து கொண்டு அனைவரையும் தனது அழகான குரலால் அசர வைத்தார்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற இசையமைப்பாளர் தமன் அந்த சிறுமியின் கதையை கேட்டு உருகினார். அவருடைய கண்களும் கலங்கியது. கண்டிப்பாக அவருக்கு பார்வை கிடைக்க தன்னால் ஆன உதவியை செய்வேன் என்று உறுதி அளித்தார்.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கலர்பொடி கோகுல் என்ற சிறுவன் கானா பாடலை சிறப்பாக பாடி பிரமிக்க வைத்தார். எளிய குடும்பத்தில் பிறந்த இந்த சிறுவன் எதிர்காலத்தில் பாடகராக வரவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் நிலையில் அவருக்கு தனது அடுத்த படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாகவும் அவருடைய அண்ணனுக்கு பாடல் எழுத வாய்ப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

More News

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா சரத்குமார்.. என்ன விசேஷம்..!

நடிகை ராதிகா திரையுலகில் நடிக்க வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து இதற்கான விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானதை அடுத்து நடிகர் ராதிகா, கீர்த்தி

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா.. தமிழ் நடிகைக்கு அழைப்பு..!

நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இசை நிகழ்ச்சி ரத்து.. ஏஆர் ரஹ்மான் ஆதங்கம்.. உடனடியாக பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நேற்று சென்னை பனையூரில் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  

தமிழக முதல்வரை அடுத்து 'ஜெயிலர்' படம் பார்த்த இன்னொரு மாநில முதல்வர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்தார் என்று செய்திகள் வெளியானது.

நாங்குநேரி அவலம்: பா ரஞ்சித், மாரி செல்வராஜை அடுத்து தமிழ் நடிகரின் ஆதங்கம்..!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர்கள் பா. ரஞ்சித், மாரி