இயக்குனர் சித்திக் மறைவு.. தளபதி விஜய்யின் நெகிழ்ச்சியான செயல்..!

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சித்திக் கடந்த வாரம் காலமான நிலையில் தளபதி விஜய் அவருடைய குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ விஜய் நடித்த ’காவலன்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள திரைப்படங்களையும் இயக்கியவர் இயக்குனர் சித்திக். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி சித்திக் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் என்பதும் ஏற்கனவே அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய், சித்திக் வீட்டுக்கு போன் செய்து அவரது குடும்பத்தினரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

'நான் இல்லாதபோது என் ஆளு மேல கையை வச்சியாமே.. எங்க இப்ப அடி.. சந்தானம் நடித்த 'கிக்' டிரைலர்..!

 சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான 'கிக்' வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'இந்த ஜெயில்ல இருந்து ஒருத்தன் கூட தப்பிச்சது இல்லை: ரவிதேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிப்பில் உருவான 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாக்கி உள்ளது.

'ஜெயிலர்' படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வார வசூல் குறித்த நிலவரத்தை

கிளாமர் இல்லாமல் ஒரு போட்டோஷூட்.. மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

'சீதாராமம்' என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

20 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் மணிரத்னம் நாயகி.. 'கீதாஞ்சலி'யை மறக்க முடியுமா?

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.