close
Choose your channels

சென்னை திரும்புகிறார் தளபதி விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு என்ன ஆச்சு?

Tuesday, December 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற சிறைச்சாலையில் ’தளபதி 64’ படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டிருந்த தளபதி விஜய் இன்று சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் மற்றும் பாடல்கள் காட்சியும் ஒரு சில உரையாடல் காட்சியும் படமாக்கப்பட்டது என தெரிகிறது

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும் இதனை அடுத்து அவர் இன்று சென்னை திரும்புவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் விஜய் திரும்பினாலும் இன்னும் ஒரு சில காட்சிகள் ஷிமோகா சிறைச்சாலையில் படமாக்கப்பட வேண்டியிருப்பதால் படக்குழுவினர் இன்னும் அங்கேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை திரும்பும் தளபதி விஜய் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் நாடு திரும்பியதும் ’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment