close
Choose your channels

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் அவருடைய மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்

மேலும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி எஸ்பிபி உடன் தங்களுக்கு இருந்த நெருக்கமான உறவு மற்றும் நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டனர்

இந்த நிலையில் இன்று தாமரைபாக்கத்தில் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் நல்லடக்கம் செய்வதற்கு முன்பே தளபதி விஜய் நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்களை கட்டி பிடித்து அவர் ஆறுதல் கூறியது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் நடித்த ‘பிரியமானவளே’ என்ற திரைப்படத்தில் அவரது தந்தையாக எஸ்பிபி நடித்திருந்தார் என்பதும், விஜய் படத்தில் எஸ்பிபி பல பாடல்களை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment