முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் இந்த படத்திற்கான பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்தபாடில்லை. விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் இன்னும் கிடைக்கப் பெறாததால் சென்சார் சான்றிதழ் வெளியிடப்படவில்லை

இந்த நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தளபதி விஜய் சந்தித்து பேசியுள்ளார். முதல்வரின் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

'மெர்சல்' படம் ரிலீசாக மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முதல்வர்-விஜய் சந்திப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் காக்கி சட்டை அணிகிறாரா அஜித்?

அஜித் நடித்த சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'அஜித் 58' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

பிரச்சனையை சமாளிக்க 'மெர்சல்' குழுவின் கடைசிகட்ட அதிரடி நடவடிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது.

சந்தானம் படத்தில் கூடுதலாக 2 ஆக்சன் காட்சிகள் ஏன்: இயக்குனர் எம்.ராஜேஷ்

காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் ரியல் ஆக்ச்னிலும் ஈடுபட்டார்.

சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அஜித், விஜய்யை அடுத்து மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுத்து வருகின்றன.

விஜய்க்கு 'தமிழாலே ஒன்றானோம்', ஜி.வி.பிரகாஷுக்கு 'தமிழானோம்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் 'தமிழாலே ஒன்றானோம்' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் தமிழுக்காக 'தமிழானோம்' என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் இயற்றி வருகிறார்.