படப்பிடிப்பு முடியும் முன்னரே இத்தனை கோடி வியாபாரமா? வசூலை தொடங்கிய 'வாரிசு'

  • IndiaGlitz, [Saturday,July 16 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதால் இந்த படத்திற்கு மற்ற விஜய் படங்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடி ரிலீஸ் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும், அதேபோன்று சாட்டிலைட் உரிமையை ரூ 65 கோடி வியாபாரம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தவிர இந்தி உரிமை தனி வியாபாரம் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் சம்பளம் உள்பட ‘வாரிசு’ திரைப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என்று கூறப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையிலேயே தயாரிப்பாளர் எடுத்து விட்டதாகவும் திரையரங்குகளில் ரிலீஸாகும் அனைத்துமே அவருக்கு லாபம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே வியாபாரம் தொடங்கி விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.