'மாஸ்டர்' படத்தில் 'ஜேடி' வளர்த்த பூனை இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பூனை ஒன்று ஒருசில காட்சிகளில் வரும் என்றும் அந்த பூனையை அவர் வளர்த்துக் கொண்டு இருப்பார் என்பதும் படம் பார்த்த அனைவரும் அறிந்ததே. இந்த பூனை தற்போது எங்கே இருக்கிறது என்ற கேள்வியை பலர் சமூக வலைதளங்களில் எழுப்பி வந்த நிலையில் ஒரு சிலர் விஜய் சேதுபதி வீட்டில் வளர்வதாக கூறிவந்தனர்

இந்த நிலையில் தற்போது இந்த பூனை எங்கே இருக்கிறது என்ற விவரம் தெரிய வந்துள்ளது. விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பவருமான நடிகர் சஞ்சீவ் வீட்டில் தான் தற்போது இந்த பூனை வளர்ந்து வருகிறது

’மாஸ்டர்’ படத்தில் ஜேடி வளர்த்த பூனை தனது வீட்டில் தான் வளர்ந்து வருகிறது என்று கூறிய சஞ்சீவ் இதுகுறித்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ‘நீங்கள் யூகித்தது சரிதான். ஜேடி வளர்த்த பூனை பாதுகாப்பாக எங்கள் வீட்டில் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் பதிவு செய்த புகைப்படத்தில் ’மாஸ்டர்’ பூனை அவரது மகள் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சஞ்சீவ்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அவர் பதிவு செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நிஷா அகர்வாலின் இன்ஸ்டா பதிவை லைக் செய்த காஜல் அகர்வால் கணவர்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே 

குவாரண்டைனிலும் உடற்பயிற்சி… அசத்தும் இந்திய கேப்டனின் வைரல் வீடியோ!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது.

கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார்.

மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் சோம்-ரம்யா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட சோம் மற்றும் ரம்யா திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஆப்பிள் தயாரிப்புகளின் புதிய மையமாகிறது தமிழகம்- முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!

நேற்று தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 52 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.