close
Choose your channels

6வது முறையாக விஜய் படத்தை வெளிநாட்டில் வெளியிடும் நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, June 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே விஜய்யின் ஐந்து படங்களை வெளிநாட்டில் வெளியிட்ட நிறுவனம் தற்போது ஆறாவது முறையாக ’கோட்’ படத்தையும் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பிசினஸ் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை குறிப்பாக வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உரிமையை ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ ’சர்கார்’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ மற்றும் ’லியோ’ ஆகிய ஐந்து படங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக ’கோட்’ படத்தையும் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வெளிநாடுகளில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வட அமெரிக்கா. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.