அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சி.. தமிழகத்தில் 'கோட்' சிறப்பு காட்சி உண்டா?

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சி அல்லது சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் முதல் காட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கூட கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தமிழகத்தை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கப்பட்டு வரும் நிலையில் ’கோட்’ படத்திற்கு அதற்கு முன்பே அதாவது அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தால் கூட காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்ற நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது என்பதால் ’கோட்’ படத்திற்கும் அதே மாதிரி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.