'கோட்' இரண்டாம் பாகம் உருவாகிறதா? கிளைமாக்ஸில் ட்விஸ்ட்..!

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் ’தளபதி 69’ படத்தை முடித்தவுடன் முழுமையாக அரசியலில் குதிக்க உள்ளார் என்றும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ’கோட்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு மூன்று மணி நேரத்திற்குள் ரன்னிங் டைம் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்சார் செய்யப்பட்டு 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ரன்னிங் டைம் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இரண்டாம் முறை சென்சார் செய்யப்பட்ட போது ப்லூபர்ஸ் வீடியோ மற்றும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டாம் முறையாக சென்சார் செய்யப்பட்ட பின்னர் ’கோட்’ படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடி என மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது தெரிந்தது.

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கோட்’ திரைப்படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

 

More News

செருப்பால் அடிக்க வேண்டும்.. நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து நடிகர் விஷால்..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மெய்யழகன்' ஆடியோ  ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கார்த்தி ரசிகர்கள் குஷி..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'வாழை' திருடப்பட்ட கதையா? எழுத்தாளரின் குற்றச்சாட்டும் மாரி செல்வராஜின் பதிலும்..!.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர்   சோ தர்மன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள நிலையில்

6000 புத்தகங்கள்..... ஜானகி அம்மாள் வியந்த எம்.ஜி. ஆர் புகைப்படம்

ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் அறிமுகமானவர்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை.. ஊர்வசி சொன்ன ஐடியா..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடக்காமல் இருக்க இதை செய்ய வேண்டும் என நடிகை ஊர்வசி ஐடியா கொடுத்துள்ளார்.