'தளபதி 69' படம் டிராப்பா? 'கோட்' படத்திற்கு பின் நேரடியாக அரசியல் தானா?

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை ஹெச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ட்ராப் என்று கோலிவுட் ஒரு செய்தி கசிந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் இந்த படத்துடன் தனது திரையுலக வாழ்வை முடித்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்த நிலையில் ஹெச் வினோத் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கி விட்டதாகவும் இந்த படம் அரசியல் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திலிருந்து திடீரென தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் விஜய் இந்த படத்தை தயாரிப்பார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி ’தளபதி 69 ’படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் ’கோட்’ திரைப்படத்தின் ரிலீசுக்கு பின் அவர் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விடுவார் என்பதும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிநாட்டு சுற்றுலா சென்று வந்த பின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் என்பது தெரிந்தது.

ஆனால் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆன நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் இந்த படம் டிராப் என்றுதான் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'கல்கி 2898 ஏடி' பட ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸாகும் கமல் படம்.. குஷியான அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கமல்ஹாசனின் சூப்பர் படம்

இளைஞர் கொலை வழக்கு: தர்ஷனுடன் 10 வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகையும் கைது..!

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே இளைஞர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தர்ஷனுடன் 10 வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில்

எஸ்வி சேகர் என்னை மிரட்டுகிறார்.. முதல்வருக்கு புகார் அளித்த தமிழ் நடிகை..!

எஸ் வி சேகர் தன்னை மிரட்டுவதாக தமிழ் நடிகை ஒருவர் முதலமைச்சருக்கு புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜூலையில் வெளியாகிறது சூர்யாவின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..! செம்ம போஸ்டர்..!

சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹாலிவுட்டுக்கு போ நண்பா... விஜய் அட்மினுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்..!

தளபதி விஜய்க்கு மிகவும் நெருக்கமான ஜெகதீஷ் அவர்களை 'ஹாலிவுட் போ நண்பா' என நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.