விஜய்யின் 'பீஸ்ட்': மாஸ் புகைப்படத்துடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றதாக அறிவித்து உள்ளது. மேலும் நெல்சன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் மாஸ் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்த ஹேஷ்டேக் டிரண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் மோட்டார் பந்தயங்களில்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடல்,

'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்