நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்ற விஜய்.. யாருக்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

தளபதி விஜய் நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்றதாக ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ’லியோ’ வெற்றி விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் தெரிந்ததும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்த் அவர்களை நள்ளிரவில் நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்ததாகவும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வரும் புஸ்ஸி ஆனந்த், விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

எங்கள் நோக்கம் முழுமை அடைந்தது.. தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா..!

எங்கள் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்தது என்றும் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்றும் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மாஸ் நடிகருடன் முதல்முறையாக செல்வராகவன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

வர்றேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ஆயுத பூஜை திருவிழாவில் லெஜண்ட் சரவணன்..!

ஆட்டோ ஓட்டுனர் நடத்திய ஆயுத பூஜை திருவிழாவில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

'லியோ' குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதனின் விமர்சனம்..

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 500 கோடி

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!