தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரெண்டுக்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

அட்லி இயக்கத்தில் விஜய் ஏற்கனவே ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய்யின் 66வது படத்தை அட்லீ தான் இயக்குவார் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பரவிவருகிறது. இதனால் தான் விஜய் ரசிகர்கள் அட்லியின் பெயரை இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் திடீரென விஜய்யின் 66வது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ’மெர்சல்’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்ற போதிலும் அந்த படத்திற்கு பின்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் எந்த ஒரு படத்தையும் இன்னும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இந்த கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதேபோல் ஷாருக்கான படத்தை இயக்குவதற்கு அட்லி தயாராகி வருவதாகவும், அந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் அவர் தமிழ் திரையுலகிற்கு திரும்ப இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும் எனவே ’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குவாரா? என்பது கேள்விக்குறியே என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

மேலும் ‘தளபதி 66’ படத்தை லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அஜய் ஞானமுத்து, வெற்றிமாறன், மகிழ் திருமேனி ஆகியோர்கள் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவரை விஜய் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

கமல் போட்டியிட போகும் தொகுதி எது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்

ராதிகாவின் 'சித்தி' கேரக்டரில் நடிக்கும் சித்தி மகள்?

நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

என்னை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்துவிட்டார்: மாரி செல்வராஜ் குறித்து மாரியம்மாள்!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடலை பாடிய மாரியம்மாள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மாரி செல்வராஜ் அவர்கள் என்னை

முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது

ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.