மலேசியன் பிரதமருடன் ரஜினி சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் நாளை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார். அவருக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த தகவலை சமீபத்தில் லைகா நிறுவனத்தில் இருந்து விலகிய ராஜூ மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் 'கபாலி' படப்பிடிப்பிற்காக ரஜினி மலேசியா சென்றிருந்தபோதும் அந்நாட்டு பிரதமரை சந்தித்தார் என்பதும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசிய பிரதமர் ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது சென்னை போயஸ் தோட்டத்து இல்லத்தில் ரஜினியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு: பேருந்தை இயக்கி அசத்திய அந்தியூர் எம்.எல்.ஏ

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பானது: ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அவரது ரசிகர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு வேலை பாருங்கள்! பஸ் ஊழியர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் திருப்தியாக இல்லை என்று கருதினால் வேறு வேலை பார்த்து கொள்ளவும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

'சொடக்கு' பாடலுக்கு தடை கோரி அதிமுக நிர்வாகி புகார்!

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'சொடக்கு மேல சொடக்கு போட்டு

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய பிரபல நடிகரின் திரைப்படம்

வரும் பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்முகபாண்டியனின் 'மதுரவீரன், மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி'