தலைவன் தோனி இருக்க பயமேன்: சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியில் இருந்து விலகியது ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தலைவன் தோனி இருக்கும் போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ’சிஎஸ்கே அணி தற்போதும் பலமாகவே இருக்கிறது. அணியின் பலம் குறித்து எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. நம் அணியில் திறமையான கேப்டன் இருக்கிறார். இது போன்ற பல கடினமான நேரங்களை அவர் ஏற்கனவே சந்தித்தவர். தலைவன் தோனி அணியை பார்த்துக்கொள்வார் என்று கூறினார்.

மேலும் நேற்றிலிருந்து வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டார்கள் என்றும், வீரர்கள் அனைவரும் துடிப்புடன் இருப்பதாகவும், சமீபத்தில் ஜூன் ஆப் மூலம் உரையாடியபோது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது எண்ணத்தை பகிர்ந்தார்கள் என்றும் இந்த ஆண்டு நிச்சயம் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

மேலும் துபாய் உள்பட அனைத்து நாடுகளிலும் விரைவில் மஞ்சள் நிற ஜுரம் பற்றிக் கொள்ளும் என்றும் இந்த ஆண்டு கண்டிப்பாக சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

More News

33 வயது மாப்பிள்ளையா? பிளேடால் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை!

தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு 33 வயது என்பதால் அவரை பிடிக்கவில்லை என்று கூறிய கல்லூரி மாணவி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

என்றும் இளமையாக இருக்க நம்ம ஊரு ஊட்டச்சத்து உணவு… தமிழிசை சௌந்திரராஜன் பரிந்துரை!!!

கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

பப்ஜி தடை எதிரொலி: 21 வயது ஐஐடி மாணவர் தற்கொலை!

கடந்த சில வாரங்களாகவே இந்திய மற்றும் சீன நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது

இட்லி, வடை, சாம்பார் சாதம்: சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதியின் சாப்பாடு!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதிக்கு காலையில் இட்லி வடை, மதியம் சாம்பார் சாதம் அளிக்கப்படுவதாக ஜெயில் வட்டாரங்களிலிருந்து

அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கிய குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒருவயது குழந்தை ஒன்று அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கியச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.