'தல 57' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் தேதி

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதில் இருந்து எதிர்பார்ப்பின் விகிதம் எகிறியது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டாலும், இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் என எதுவுமே அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது பிப்ரவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி உள்பட முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே...

புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது...

மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உதவி செய்யுங்கள். வேட்பாளரின் நூதன கோரிக்கை

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துவிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன...

சூர்யாவுக்கு பீட்டா அனுப்பிய மன்னிப்பு + அறிவுரை கடிதம்.

நடிகர் சூர்யா, தனது 'சி3' படத்தின் புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தை பயன்படுத்துகிறார் என்று பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியதற்கு கடந்த வாரம் சூர்யா, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்...