close
Choose your channels

'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

Thursday, January 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.

அஞ்சனா அனிருதிடம் 'எப்போது கல்யாணம்' என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் 'நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம்' என்று கூறினார். அதேபோல் அஞ்சனா விக்னேஷ் சிவனிடம் 'உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா' என்று கேட்டதற்கு 'கண்டிப்பாக காதல் திருமணம் தான்' என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

அடுத்து அஞ்சனா இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அனிருத்திடம் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். அஞ்சனா சந்திரன் 'உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம்' என்ற கேள்விக்கு அனிருத் 'கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா?? என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்தபடி இருந்தார். அடுத்ததாக அஞ்சனா அனிருத்திடம் 'உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? என்று கேட்டதற்கு 'நயன்தாரா' என்று அனிருத் கூறினார். இவ்வாறு அனிருத் கூறிய அடுத்த நொடியே அரங்கமே அதிர்ந்தது.

இவ்வாறு இந்த நிகழ்ச்சி கலகலப்பாக நடந்தது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment