'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.

அஞ்சனா அனிருதிடம் 'எப்போது கல்யாணம்' என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் 'நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம்' என்று கூறினார். அதேபோல் அஞ்சனா விக்னேஷ் சிவனிடம் 'உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா' என்று கேட்டதற்கு 'கண்டிப்பாக காதல் திருமணம் தான்' என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

அடுத்து அஞ்சனா இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அனிருத்திடம் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். அஞ்சனா சந்திரன் 'உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம்' என்ற கேள்விக்கு அனிருத் 'கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா?? என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்தபடி இருந்தார். அடுத்ததாக அஞ்சனா அனிருத்திடம் 'உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? என்று கேட்டதற்கு 'நயன்தாரா' என்று அனிருத் கூறினார். இவ்வாறு அனிருத் கூறிய அடுத்த நொடியே அரங்கமே அதிர்ந்தது.

இவ்வாறு இந்த நிகழ்ச்சி கலகலப்பாக நடந்தது.

 

More News

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்: ரசிகர்கள் முன் பேசிய சூர்யா

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது

இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரமுத்து பேச்சால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாடகி

கவியரசு வைரமுத்து சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாரோ வெளி நாட்டவர் எழுதிய கட்டுரை தேவையா? வைரமுத்து விவகாரம் குறித்து விவேக்

சமீபத்தில் ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார்.

ரசிகர்களுக்கு த்ரிஷா தரும் பொங்கல் விருந்து

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் த்ரிஷாவின் படம் எதுவும் வெளிவரவில்லை எனினும், தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாத வகையில் அவர் நடித்த 'மோகினி' படத்தின் பாடல்கள் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.