பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை: கணவர் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் நேற்று தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த தேஜஸ்வனி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் தொகுப்பாளினியாகவும் இருந்தவர் தேஜஸ்வனி. இவர் ஐடி ஊழியரான பவன்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இருவரின் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. இந்த நிலையில் ஒருசில ஆண்டுகள் துபாயில் வசித்த இந்த தம்பதிகள் பின்னர் சமீபத்தில் இந்தியா திரும்பினர்

இந்த நிலையில் நேற்று தேஜஸ்வனி தன்னுடைய அறையை உள்பக்கமாக பூட்டி கொண்டு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அவருடைய மாமியார் அதிர்ச்சி அடைந்து பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது தேஜஸ்வனி தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேஜஸ்வனி எழுதிய லட்டரை கைப்பற்றினர். அதில் தன்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்ததால் அதிர்ச்சி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தேஜஸ்வனியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More News

பிக்பாஸ் 2: ஒருசில மணி நேரத்தில் வெளியேறிய ஓவியா: காரணம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பின்னர் 17வது நபராக சிறப்பு விருந்தினராக ஓவியா உள்ளே அனுப்பப்பட்டார்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது என்பது தெரிந்ததே. அந்த வகையில்

பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி.

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 2ஐ அடுத்து கமல்ஹாசனின் திட்டம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ளதால் இதனையடுத்து கமல்ஹாசன்