திரையுலகின் முன்னணி பி.ஆர்.ஓ திடீர் மறைவு: அதிர்ச்சியில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜூ அவர்கள் திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் காலமாகி வருவது காரணமாக அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகினர் தற்போது பிஆர்ஓ ராஜூ அவர்களின் மறைவால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

பி.ஏ.ராஜூ அவர்கள் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் திரைப்படங்களின் புரமோஷன்களையும் சிறப்பாக கவனித்து வந்தவர் என்பதும் தெலுங்கு திரையுலகிற்கு அவர் முக்கிய பணி ஆற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜூ காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிஆர்ஓ ராஜு அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்துள்ளனர்.

 

More News

கோவிட் -ஆல்  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம்...! வடமாநில அரசு அறிவிப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி....!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், துப்பாக்கிச்சூடு அங்கு நடைபெற்றது.

ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது 'ஃபிரண்ட்ஸ்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

'வலிமை', 'இந்தியன் 2' குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த முபாரக் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி 34 வயதான யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.