close
Choose your channels

அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

Wednesday, April 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி பின்னர் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். ஒரு தயாரிப்பாளரின் மகன் தன்னை சீரழித்துவிட்டதாக கூறிய அவர் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார்

இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகை நான்கு குடும்பங்கள் ஆட்டி வைப்பதாகவும், அந்த குடும்பங்களின் வாரிசுகளை தவிர வேறு யாரேனும் வளர்ந்து வந்தால் அவர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி அவர்களை நாசமாக்குவதாகவும் தற்போது திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் அவ்வப்போது நடந்து வரும் தற்கொலைகளுக்கும் இந்த நான்கு குடும்பங்கள் தான் காரணம் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தன்னை சமாதானப்படுத்த கோடிக்கணக்கில் பணம் கொடுக்க தெலுங்கு திரையுலகினர் முன்வந்ததாகவும், ஆனால் அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறிய ஸ்ரீரெட்டி, எனக்காக மட்டுமின்றி அனைத்து நடிகைகளுக்காகவும் தான் போராடி இருட்டில் இருக்கும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment