இதே நிலைமை நமக்கும் ஏற்படலாம்... 'அயலான்' ரிலீஸ் எதிர்ப்பாளர்களுக்கு விநியோகிஸ்தர் எச்சரிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள் தெலுங்கு மாநிலங்களில் வெளியாகவில்லை. ஒரு வாரம் கழித்து தான் அங்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்கள் அதே தேதிகளில் ரிலீஸ் ஆவதால் தமிழ் படங்களை வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விநியோகிஸ்தர் மகேஷ்வர் விடுத்துள்ள எச்சரிக்கையில் ‘அயலான்’ படத்தை ஒரே நாளில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு செய்திருந்தோம். ஆனால் இப்போது எழுந்து உள்ள சர்ச்சையிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம். ஒரு சில மீடியாக்கள் வேண்டுமென்றே தனிப்பட்ட நபரை குற்றம் சாட்டி வருகின்றன.

தெலுங்கு திரையுலகம் தற்போது பான் -இந்தியா மற்றும் பான் -உலகம் என வளர்ந்து கொண்டிருக்கிற நிலையில் எதிர்மறை எண்ணங்களை கொண்ட சிலரால் தெலுங்கு திரை உலகிற்கு ஆபத்து ஏற்படும் என்பதை யோசிக்க வேண்டும். நம்முடைய படங்களும் பக்கத்து மாநிலங்களில் வெளியாகும் போது இதே போன்ற பிரச்சனை ஏற்படும். தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அங்கும் எதிர்ப்புகள் உருவாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

தெலுங்கு திரை உலகத்திற்கு இது மாதிரியான சர்ச்சைகள் நல்லதல்ல, என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து நான் ஆலோசனை சொல்ல போவதில்லை. ஆனால் என்னுடைய வேதனையை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இசைஞானி பாடலில் என்ன ஒரு ரொமான்ஸ்.. ரஜினியின் 'பேட்ட' படத்தின் 6 நிமிட வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆனதை அடுத்து படத்தில் இடம் பெறாத காட்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில்

என் பொண்டாட்டி திட்ட போறா.. வீட்டிற்குள் வந்ததும் கூல் சுரேஷ் செய்த செயல்..!

 பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கூல் சுரேஷ் வரும் காட்சிகள் உள்ளன.

'சூர்யா 43' படத்திற்கு கார்த்தி பட நடிகை தான் நாயகியா? ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'சூர்யா 43'  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது

டைட்டில் வின்னர் என டைப் அடிச்சா என் பேரு தான் வருது.. வெளியே வந்தும் திருந்தாத விக்ரம் சரவணன்..!

 கூகுளில் டைட்டில் வின்னர் என டைப் அடித்தால் என்னுடைய பெயர் தான் வருகிறது என இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள விக்ரம் சரவணன் கூறி இருப்பதை பார்வையாளர்கள் கேலியும் கிண்டலும் செய்து வெளியே வந்தும்

எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் இத்தனை காப்பி காட்சிகளா? ரசிகர்கள் அதிர்ச்சி..

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் உருவான 'பாகுபலி' என்ற திரைப்படம் கடந்த  2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் 180 கோடியில் உருவாகி 600 கோடிக்கு மேல் வசூல்