கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்க தயார்: 'இரவின் நிழல்' நடிகை அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் அரை நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று ஏற்கனவே பல நடிகைகள் கூறியுள்ள நிலையில் தற்போது இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகையும் அதேபோல் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்க தயார் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நடிகை பிரகிடா நிர்வாணமாக ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதேபோல் ராணி என்ற கேரக்டரில் நடித்துள்ள ரேகா நாயர் ஒரே ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பதும் அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று அவர் கூறினார். மேலும் கதைக்கு தேவை என்றால் பிச்சைக்காரியாக, விபச்சாரியாக என எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என்றும் கலையை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் ஆபாசமாக பார்த்தால் அனைத்திலும் ஆபாசம் மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தளபதி 67: சமந்தா வில்லி என்றால் இவர் தான் விஜய்க்கு ஜோடியா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கசிந்துள்ளது. 

'மாட்னா காலி, மாட்றவர் ஜாலி': சந்தானம் நடிக்கும் 'குலுகுலு' சிங்கிள் பாடல்

சந்தானம் நடித்துள்ள 'குலுகுலு' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை இவர்தான்!

கள்ளக்குறிச்சி சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி

குளோஸ் அப் பிகினி புகைப்படம் : ரசிகர்களை கிளாமரில் மிரட்டும் விஜய் பட நடிகை!

விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளோஸ் அப் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான முயற்சி: இதுவும் உலகின் முதல்முறையா?

'புதியபாதை' படம் முதல் பார்த்திபனின் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் எடுத்து வரும் திரைப்படங்கள் தனித்துவமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.