துணையை கண்டுபிடித்த விவாகரத்தான நடிகைக்கு திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

விவாகரத்தான மூன்று ஆண்டுகள் கழித்து துணையை கண்டுபிடித்ததாக சமீபத்தில் அறிவித்த நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை நிவேதிதா, சீரியல் நடிகர் சுரேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்கள் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல சீரியல் நடிகை நிவேதிதா, ஆரியன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் தனியாக இருந்த நிவேதிதா சமீபத்தில் தான் தன்னுடைய துணையை கண்டுபிடித்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

‘திருமகள்’ என்னும் சீரியலில் நிவேதிதா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதே சீரியலில் நடித்த சுரேந்தர் தான் அவரது காதலர் என்பதும் தெரியவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது என்னுடைய துணையை கண்டுபிடித்து விட்டேன் என்றும் ஸ்பெஷலான ஒருவருடன் இணைய இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நிவேதிதா - சுரேந்திரன் திருமணம் நடந்துள்ள நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இருவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

கமல்ஹாசனின் அடுத்த படம் 9 பாகங்களாக தயாராகிறதா? ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 9 பாகங்களாக திரையிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'லால் சலாம்' சக்சஸ் மீட்.. முக்கியமான ரெண்டு பேரை காணவில்லையே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் தற்போது நடந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் நடித்த இரண்டு முக்கிய பிரபலங்கள் இந்த சக்சஸ்

தமிழ் தேசிய அரசியல்னா என்ன? : மோகன் ஜீ கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த சீமான்

தமிழர்களுக்காகவும், தமிழ் நிலத்திற்காகவும் பேசும் அரசியலே தமிழ் தேசிய அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு நடிக்க வந்தேன் - பிரபல நடிகர் உருக்கம்

மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்ததாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 'கோட்' சிங்கிள் எப்போது? ரசிகரின் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆவது எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு