close
Choose your channels

மது பிரியர்களுக்கு இலவச மது வழங்கிய தெலுங்கானா இளைஞர் கைது

Monday, April 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அதில் தற்போது 20 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த இருபது நாட்களும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் திண்டாடினர்

ஒரு சில நாட்களில் மட்டுமே கள்ள மார்க்கெட்டில் மது கிடைத்த நிலையில் தற்போது அதுவும் கிடைக்கவில்லை என்பதால் மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த குமார் என்பவர் ஊரடங்கிற்கு முன்னதாகவே மொத்தமாக மது வாங்கி வைத்து இருந்ததாகவும், மது பிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வதை காண சகிக்காமல் அவர் மதுவுக்கு அடிமையானவர்களை தேடி கண்டுபிடித்து இலவசமாக மது கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுவுக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது நல்ல நோக்கம் தான் என்றாலும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment