ஒத்தை ஆளாக இருந்து 75 உயிர்களைக் காப்பாற்றிய சிறுவன்… குவியும் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

 

மகாராஷ்டிராவில் 18 வயது சிறுவன் தனி ஆளாக இருந்து தன்னுடைய பெற்றோர் உட்பட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 நபர்களைக் காப்பாற்றி இருக்கிறான். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் கோபார் பகுதியில் உள்ள  2 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழ ஆரம்பித்து இருக்கிறது.

இதை  விடியற்காலை 2 மணிக்கு வெப் சீரியஸ் பார்த்துக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் குணால் மோஹைட் கவனித்து இருக்கிறான். முதலில் பார்த்தபோது குணாலின் வீட்டு சமயலறை முழுக்க அப்படியே சரிந்து விழுந்து இருக்கிறது. கூடவே மணலும் தூசியுமாகப் பறந்து இருக்கிறது. இதைப் பார்த்து பயப்படாத அச்சிறுவன் உடனே சுதாரித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர்களை அவசரமாக எழுப்பி இருக்கிறான்.

அடுத்ததாக அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள அனைவரையும் கத்திக் கூப்பாடு போட்டு எழுப்பவும் செய்திருக்கிறான். சிறுவன் எச்சரித்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 75 பேரும் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இச்சம்பவம் நடந்து முடிந்த சில நிமிடங்களில் அந்த அடுக்குமாடி கட்டிடம் முழுவதுவமாக சரிந்து விழுந்ததாக கோபார் பகுதியில் உள்ள மாநகராட்சி துறை அலுவலர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக இந்த கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே குடியிருப்பு வாசிகள் இந்தக் கட்டிடத்தை விட்டு காலி செய்து கொள்ளவும் என கோபார் பகுதியின் மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வீட்டை விட்டு காலி செய்யாமல் தொடர்ந்து அந்தக் குடியிருப்பு வாசிகள் அங்கேளே வசித்து வந்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்கிறது. எப்படியோ சிறுவன் குணால் வெப் சீரியஸ் பார்த்துக் கொண்டிருந்ததை அடுத்து உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிறுவன் குணால் மோஹைட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News

தீபாவளிக்கு 'மாஸ்டர்' இல்லை: பொங்கலுக்காவது வருமா? தயாரிப்பாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி திறக்க உள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் திரையரங்குகள் திறந்து விட்ட

தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது

திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி-சனம்ஷெட்டி ஆவேச மோதல்: வேடிக்கை பார்க்கும் அர்ச்சனா குரூப்!

பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி, எட்டி உதைத்ததால் பொங்கி எழுந்த பாலாஜி ஆத்திரத்துடன்  பேசி வருகிறார். பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த

டிரெண்டான தோனியின் ஒரு வார்த்தை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் முடித்துள்ளது.