முழங்கால் தண்ணீரில் நின்று டீ ஆற்றும் நாயர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத கனமழையால் கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் கண்டிராத பெருந்துன்பத்தை அனுபவித்தனர். தற்போது மழை ஓரளவுக்கு குறைந்தாலும் இன்னும் வெள்ளநீர் பெரும்பாலான பகுதிகளில் வடியவில்லை

இந்த நிலையில் கேரளாவில் டீக்கடை வைத்திருக்கும் ஒரு நாயர், தனது கடையில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தபோதிலும் கடையை திறந்து டீ விற்பனையை தொடங்கிவிட்டார். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் தண்ணீரில் நின்று கொண்டே டீயை வாங்கி குடித்து செல்கின்றனர்.

நாயர் டீ போட்டு அதை ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் வைத்து வாடிக்கையாளர்கள் பக்கம் தள்ளிவிட, தண்ணீரில் மிதந்து வரும் அந்த டீயை எடுத்து வாடிக்கையாளர்கள் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,.