2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்....! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி...!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

தொடர்ந்து 2 நாட்களுக்கு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. தினசரி வைரசால் பாதிக்கப்படுபவர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உயிரிழந்து வரும் சம்பவங்களும் மனதை பதைபதைக்க வைக்கின்றது. தொற்று அதிகமாக பரவி வருவதால் தனியார் மதுபானக் கூடங்கள் மற்றும் டாஸ்மாக்குகள் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளன. மதுப்பிரியர்கள் இதனால் வருத்தமடைந்த வந்த நிலையில், தமிழக அரசு மீண்டுமொரு செய்தியை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் தினமான மே-1 அன்றும், வாக்கு எண்ணிக்கை நாளான மே-2 அன்றும் டாஸ்மாக்-க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாளான வெள்ளியன்றே கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்துவிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.