டாப்சியின் 'கேம் ஓவர்' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி அதன் பின் அஜித்தின் 'ஆரம்பம்', ராகவா லாரன்சின் 'காஞ்சனா 2', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்ற டாப்சி, அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது தமிழில் 'கேம் ஓவர்' என்ற படத்தில் டாப்சி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளில் வீல்சேரில் உட்கார்ந்தே நடித்துள்ள டாப்சி, இந்த கேரக்டர் தனக்கு சவாலாக இருந்ததாகவும், இப்படி ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

டாப்சி, அனிஷ் குருவில்லா, வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'மாயா' என்ற த்ரில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் மதம் மாறிய தாடி பாலாஜி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்த நிலையில்

உதயநிதியை முதல்முதலாக பார்க்கின்றேன்: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில்

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால்!

நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில் தனது வருங்கால மனைவி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷால் கூறியுள்ளார்.

சின்னத்திரை பிரபலத்தின் பட டீசரை வெளியிட மறுத்த விஜய்சேதுபதி! காரணம் என்ன?

ஒரு நடிகரின் பட டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவற்றை இன்னொரு நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் வழக்கம் தற்போது கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது

காதலர் தினத்தில் நாய்க்கு தாலி கட்டிய வாலிபர் கைது!!

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் வரும்போது சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஒருசில அமைப்புகள் காதலர்களை பிடித்து வைத்து அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வரும் கொடூரம் நடந்து வருகிறது