நடிகை டாப்ஸி நடிக்கும் மேலும் ஒரு தமிழ்ப்படம்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

கடந்த 2010ஆம் ஆண்டு ’ஆடுகளம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’வைராஜா வை’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது ஒரு சில தமிழ் படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். குறிப்பாக ’ஜனகணமன’ மற்றும் தீபக் சுந்தரராஜன் இயக்கும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் டாப்ஸி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது டாப்ஸி நடிக்கும் மேலும் ஒரு தமிழ் படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அருள்நிதி நடிப்பில் உருவான K-13 என்ற படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் என்பவரின் இயக்கத்தில் டாப்ஸி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

More News

'மானாட மயிலாட' கோகுல் மனைவியும் க்யூட் குழந்தைகளும்: வைரல் புகைப்படம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற பல கலைஞர்களின் ஒருவர் கோகுல் என்பதும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார்

இணையதளங்களில் வைரலாகும் நடிகை நதியாவின் யோகா வீடியோ!

சமீபத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே யோகாவின் சிறப்பு குறித்து உரையாற்றினார் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள்

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்: பிரபல இயக்குனர் தகவல்!

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்யை நடிக்க வைப்பேன் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார் 

தம்பதியின் தவறான முடிவு....! பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை....!

பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதில், மூச்சுத்திணறல் காரணமாக பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது 7 ஆயிரத்திற்கு குறைந்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளது.