ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர்? அதுவும் 19 வயதில்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளைஞர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகி உள்ளார். இத்தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பல நாடுகளில் உள்ளூர் அளவிலும், Under 19 அளவிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக ஒரு இளம் வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட ஜோகா சாய் சங்கா கடந்த 24 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்து உள்ளார். முன்னதாக பஞ்சாப்பின் ஜலந்தரில் விவசாயப் பணியாற்றி வந்த இவர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றதும் டாக்சி டிரைவராக மாறி இருக்கிறார். இவரின் மனைவி உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 19 வயது மகன் தன்வீர் சங்கா கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் கொண்டவர். இதனால் உள்ளூர் அளவில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார்.

தற்போது வரும் பிப்ரவரியில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் தன்வீர் ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்க உள்ளார். இந்தத் தகவலை கேட்டதும் தன்வீர் நிலவில் மிதப்பதாக உணந்தாராம். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதில் விளையாட இருப்பது எனக்கு கிடைத்த ஒரு வரமாகவே உணருகிறேன் எனத் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் 19 வயதில் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

சென்னையில் அடுத்த தலைமுறை இ-பைக்குகள்… துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் புதிய இ-பைக்குகள், அதை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான செல்பி பாயிண்ட் மற்றும் அடுத்த தலைமுறை ஜென் சைக்கிள்கள் போன்றவை இயக்கப்பட உள்ளன.

5 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம்… வைரல் வீடியோ!

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் காரை அசால்ட்டாக ஓட்டுகிறான்

தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு…  இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!

​​​​​​​இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்