பிரபல கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சசிகலா…

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் விலகைத் தொடர்ந்து திருமதி சசிகலா முதல் முறையாக வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்க சன்னதி கொண்ட தலமாகும். மேலும் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் இது கருதப்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வருகை தந்த சசிகலா அங்குள்ள 27 நட்சத்திர லிங்க சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தியதோடு அங்குள்ள ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டுள்ளார்.

தொடர்ந்து பிரகத் சுந்தர குஜாம்பாள் சன்னதிக்கும் சசிகலா சென்று வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக 4 ஆண்டு சிறை சென்ற திருமதி சசிகலா அரசியலில் களம் காண்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலை விட்டு விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அமமுக-வை ஆதரிக்காத  சசிக்கலா...! உண்மையை போட்டுடைத்த சி.ஆர். சரஸ்வதி....!

டிடிவி தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு,

தோஷம் கழிக்க 13 வயது சிறுவனுடன் திருமணம்… பெண் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏதோ தோஷம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பிவிடுகின்றனர்.

தஞ்சையில் மேலும் ஒரு  பள்ளியில் கொரோனா பாதிப்பு!  

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கமலை அநாகரிகமாக பேசிய  செந்தில் பாலாஜி..! வலுக்கும் எதிர்ப்புகள்...!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேசிய கருத்துக்கள்

சிம்ரனை அடுத்து 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.