சென்னைக்கு குட்பை சொன்ன 'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த சிவா, திஷா பாண்டே இந்த இரண்டாவது பாகத்திலும் நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் ஐஸ்வர்யா மேனன், சந்தீஷ், சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'குட்பை சென்னை, ஹலோ மலேசியா' என்று குறிப்பிட்டு மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்ற இளம் நகைச்சுவை நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் பிசியாக இருந்தாலும், அவரை தேடி வரும் திரையுலக பிரபலங்களை சந்திக்க அவர் மறுப்பு தெரிவித்ததே இல்லை

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: இளம்பெண் பலியான பரிதாபம்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் ஒருசில தீமைகளால், சிலசமயம் உயிர்ப்பலியும் ஏற்படும் கொடுமை நடந்து வருகிறது.

கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதுரை சென்றார்.

ரஜினியின் 'காலா' படத்தில் பாடும் வாய்ப்பை பெற்ற பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரியா வாரியர் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு

மலையாள நடிகை பிரியாவாரியர் ஒரே ஒரு கண்சிமிட்டலின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானார். கூகுள் தேடலில் முன்னணி நடிகைகளான சன்னிலியோனை முந்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.