தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

கடந்த சில நாட்களாக கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

எதிர்பார்க்கப்பட்டதுபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இரவு முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கும். டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் இன்று நண்பகலுக்கு பின் மழை பெய்து இருக்கிறது.

தென் தமிழகத்தின் பலபகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று இரவு மழை அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கையிலும் கூட மழை பெய்யும் வாய்ப்புள்ளது.


 
சென்னையைப் பொறுத்தவரை ஒரு வாரத்துக்கு வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்குள்ளேயே இருக்கும். வங்காள விரிகுடா கடலில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசத் தொடங்கிவிட்டதால், வெப்பநிலை இயல்புக்கு குறைவாகவே இருக்கும். அதிகபட்சமாக 36 டிகிரிவரை செல்லலாம். கடந்த 2016-ம் ஆண்டு இருந்ததைப் போல் 40டிகிரி அளவுக்கு செல்லாது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்

More News

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்

ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் . குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது