ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையிலும் இன்று விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும்.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் திசையை வைத்துதான் அது எங்கே செல்கிறது என்பதை கணித்து குறித்து சொல்ல முடியும். இன்று சென்னையில் மழை விட்டு விட்டு பெய்தாலும், இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கிண்டியில் 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

More News

சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது 

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.

அனைத்து சுர்ஜித்தையும் காப்பாற்றுங்கள்: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்

கடந்த வெள்ளி அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணறு ஒன்றில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன்