தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் தமிழகப் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது.

மேலும் 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மற்ற மாணவர்கள் எப்போதும் போல ஆன்லைனில் வகுப்புகளை கவனித்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதனால் 50% மாணவர்கள் மட்டுமே தினம்தோறும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

இதையடுத்து பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த அறிக்கையை தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதில்,

 

கொரோனா பரவலைத் தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும்.

மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும்.

இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.

முதல் நாளில் 50% மாணவர்களும் மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் என மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயதுடைய அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 5 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளியின் கழிவறைக்கு வெளியே கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போட்டிருக்க வேண்டும்.

பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை.

More News

நான் யாரிடமும் 'சாரி' கேட்கவில்லை: மின் துறை அமைச்சருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின் வாரிய அதிகாரிகள் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்றதாகவும் தங்கர்பச்சான் அளித்த புகார் குறித்து

வாய் தவறி பேசிவிட்டேன்: நீதிமன்றத்தில் மீராமிதுன் மனுதாக்கல்!

வாய் தவறி குறிப்பிட்ட சமுதாய குறித்து பேசி விட்டதாகவும் தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

ஓடிடியில் சந்தானம் நடித்த அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: வைரல் வீடியோ

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப துணிந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது