டெல்லியில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்பாதது ஏன்? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த நேற்றிரவு பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி அவசர சட்டம் இயற்ற மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்னும் திரும்பவில்லை. டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ஜல்லிக்கட்டை உடனே நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றக்கூடிய வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒருவேளை அவசர சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டை நடத்தினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், அந்த விளைவுகளை சந்திப்பது எப்படி என்பது குறித்தும், அந்த சமயத்தில் மத்திய அரசிடம் பெறும் உதவிகள் குறித்தும் முதல்வர் டெல்லியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அவர் சென்னை திரும்பும்போது அதிரடி முடிவுடன் தான் வருவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓபிஎஸ் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

More News

இனி நாங்கள் இந்தியர் இல்லை. மெரினாவில் தூக்கி எறியப்பட்ட ஆதார் அட்டைகள்

தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க போராடி வரும் இளைஞர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபணம் செய்து வருகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தரத்தயார். பிரபல நடிகர்

ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்ய கோரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்...

ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும்...

எங்களை நேரடியாக சந்தியுங்கள். பிரதமர் மோடிக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.