சிரஞ்சீவியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை!

சிரஞ்சீவி நடித்த 151வது திரைப்படமான ’சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சிரஞ்சீவி அவர்கள் நேரில் சந்தித்து தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதுமட்டுமின்றி தனது படமான ’சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தை தமிழிசை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரஞ்சீவியின் இந்த வேண்டுகோளை தமிழிசை அவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் குடும்பத்துடன் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்தை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

பிகில் டீசர் எப்போது? அர்ச்சனா கல்பாதி தகவல்

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் டீசர் எப்போது என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் கண்டிப்பாக பிகில்

ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த 3 ரிலீஸ்!

நேற்று வெளியான தனுஷின் 'அசுரன்' திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவர உள்ள படங்கள்

நிகழ்ச்சி முடிவடையும் நேரத்திலும் வனிதாவை கலாய்க்கும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இது டிரைலர்தான் மெயின் பிக்சர் இனிமேல்தான்: மதுமிதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, திடீரென தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர்.