யூடியூபர் பிரியாணிமேன் கைது ஏன்? காவல்துறை விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

யூடியூபர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபர் கைது.

நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட சில சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

More News

பிக்பாஸ் தினேஷ்-க்கு அம்மா அப்பா சொன்ன குட் நியூஸ்.. இதுதான் லைஃப் டைம் கிப்ட்..!

சீரியல் நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தினேஷின் அம்மா அப்பா அவருக்கு பரிசு கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்

வயநாடு நிலச்சரிவு..  அரசு அதிகாரிகளுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு

யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்த பிரபல நடிகர்.. ராதிகா பாராட்டு.. உதயநிதியிடம் கோரிக்கை..!

அவதூறாக கருத்துக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது பிரபல நடிகர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகை ராதிகா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியையும்

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. கோலிவுட்டில் பரபரப்பு..!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு முன் பிரேம்ஜி மனைவி கொடுத்த முத்தம்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி மனைவி இந்து சற்று முன் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.