கட்சியின் பெயரை மாற்றிய தமிழ் வில்லன் நடிகர்.. புதிய பெயர் என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

தமிழ் திரை உலகின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் புதிய அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அவர் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இவர் சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி ’தமிழ் தேசிய புலிகள்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த நிலையில் இந்த கட்சியின் பெயரை தற்போது மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்திய ஜனநாயக புலிகள், முன்னர் தமிழ் தேசிய புலிகள் என அறியப்பட்டது. தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.

தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம் நாம் சமூக நீதியை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

More News

புதிய பல  படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று  இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் அவரது பயணம், வியக்க வைக்கிறது. 400 கோடியில்

நாளை மற்றும் நாளை மறுநாள்: அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் யோகிபாபுவின் 2 படங்கள்..!

நாளை ஜனவரி 25 மற்றும் நாளை மறுநாள் ஜனவரி 26 ஆகிய இரண்டு நாட்களிலும் அடுத்தடுத்து யோகி பாபு ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 'அயலான்' வசூல் செய்த தொகை இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் நான்கே

அஜித், விஜய்யின் அடுத்த படங்களை தயாரிப்பது தெலுங்கு பட நிறுவனங்களா?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய்யை வைத்து படம் தயாரிக்க தமிழகத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கும் நிலையில் அஜித், விஜய் ஆகிய இருவருடைய

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' சென்சார் தகவல்.. ரிலீஸ் எப்போது?

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.