விஜய்சேதுபதி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நடந்து வருவது தெரிந்ததே. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜய்சேதுபதி தூதராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது ஏற்கனவே அறிந்ததே.

இந்த நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டிகள் சென்னையில் ஆரம்பமானது. கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முதல் போட்டியை தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் தமிழ்தலைவாஸ் மற்றும் பாட்னா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகளை பெற்றது.

நேற்றைய போட்டியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் காண வந்து தமிழ் தலைவாஸ் வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றி பெற்றவுடன் வீரர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணி, உபி அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.